sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

/

வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு


ADDED : மார் 01, 2024 01:53 AM

Google News

ADDED : மார் 01, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் நடந்த விவாதம் வருமாறு:

மலைவாழ் மக்கள் நலச்சங்கம் வி.பி.குணசேகரன்: வனஉரிமை அங்கீகாரச்சட்டம்-2006 ஐ அமல்படுத்திவிட்டு, அந்தியூர் உள்ளிட்ட பகுதியில் வனவிலங்குகள் சரணாலயத்தை அறிவிக்கலாம். சமவெளி பகுதியினரைவிட, மலைப்பகுதி மக்களுக்கு, 100 நாள் வேலை திட்டத்தை முழுவதுமாகவும், கூடுதலாகவும் அமலாக்க வேண்டும். அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பில்லை.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க சுதந்திரராசு: மஞ்சள் வாரியத்தின் ஒரு கிளை, ஈரோட்டில் அமைக்க வேண்டும். மாநில வேளாண் பட்ஜெட்டுக்கு முன், விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும் வலியுறுத்தியும் நடக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளில் செயல்படுத்தாமல் அரசு மெத்தனம் காட்டுகிறது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா: வனஉரிமை அங்கீகாரச்சட்டம் குறித்து தனியாக ஒரு கூட்டம் போட்டு விவாதிக்கலாம். வனத்தில் வாழ்பவர்கள் தேன், கடுக்காய் எடுக்க வனத்துறை சட்ட விதிப்படி அனுமதிக்கப்படுவர். வனத்தில் வசிப்போர் வனத்துக்கான பாதுகாப்பு என்ற ரீதியில், அவர்களிடம் குறிப்பிட்ட ஆவணங்களை பெற்று, உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், இங்கு பேசிவிட்டு வெளிநடப்பு செய்தவர்களின் கோரிக்கை குறித்தும் பரிசீலிக்கப்படும். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us