sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் விபரீத முடிவு தந்தை போலீசில் புகார்

/

மகன் விபரீத முடிவு தந்தை போலீசில் புகார்

மகன் விபரீத முடிவு தந்தை போலீசில் புகார்

மகன் விபரீத முடிவு தந்தை போலீசில் புகார்


ADDED : அக் 16, 2024 01:10 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகன் விபரீத முடிவு

தந்தை போலீசில் புகார்

ஈரோடு, அக். 16-

ஈரோடு, கோட்டை, கண்ணகி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன், 52; இவரின் மகன் ஹரீஷ், 24; மகள் சுவிதா. பெங்களூரில் சுவிதா, எம்.பி.ஏ., படித்து வருகிறார். ஹரீஷ் இரு மாதமாக சென்னையில் தனியார் இன்போடெக் நிறுவன ஐ.டி., பிரிவில் வேலை செய்து வந்தார். வியாபாரத்துக்கு வாங்கிய கடனை அடைக்க, தந்தை தியாகராஜன் வீட்டை விற்றுள்ளார். அதன் பிறகும் கடனை முழுமையாக செலுத்தவில்லை.

ஆயுதபூஜை விடுமுறைக்காக வீட்டுக்கு ஹரீஷ் வந்தார். கடந்த, 13ம் தேதி இரவு வீட்டில் அனைவரும் துாங்கிய பின், பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். மறுநாள் காலை தியாகராஜன் அறைக்கு சென்று பார்த்தபோது, வாயில் நுரையுடன் ஹரீஷ் கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us