sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

/

ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


ADDED : ஜூலை 31, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நான்காவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பதால், கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளனமானோர் குவிகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து கடந்த, 27ல், வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி, உபரிநீர் திறந்ததால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அன்று முதல் கொடிவேரி தடுப்பணைக்குள் நுழையவும், குளிக்கவும், பரிசல் பயணம் செல்லவும், நீர்வள ஆதாரத்துறை சார்பில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த, 28ல், வினாடிக்கு, 14,963 கன அடியும், நேற்று முன்தினம், 4,083 கன அடியாகவும் நீர்வரத்து குறைந்தது. அந்த வரிசையில் நேற்று காலை 8:00 மணிக்கு, 2,423 கன அடியாக குறைந்தது. ஆனால் நான்காவது நாளாக தடை நீடித்ததால், கொடிவேரி தடுப்பணையின் நுழைவு வாயில் முதல், பரிசல் துறை வரை சுற்றுலா பயணிகளின்றி நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us