/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறதியா... விதியா...? பலியான இளம்பெண்
/
மறதியா... விதியா...? பலியான இளம்பெண்
ADDED : நவ 11, 2025 02:22 AM
பெருந்துறை, கோவை, எல்.எம்.டபிள்யூ., குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் மகன் மதுமிதா, 21; பெருந்துறையை சேர்ந்தவர் கவுதம், 25; காதலித்த இவர்கள் கடந்த, 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தில் வசித்தனர். மதுமிதாவும்
வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை பொது குளியலறையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் ஹீட்டர் போட்டுள்ளார். ஞாபக மறதியாக தண்ணீர் சுடுகிறதா என்று தொட்டு பார்த்தபோது, மின்சாரம் தாக்கியுள்ளது. அலறியபடி விழுந்தவரை மற்ற குடியிருப்புவாசிகள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

