ADDED : நவ 23, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் அகிலாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரபு, 35; இவர், 10 வெள்ளாடு வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்ட நிலையில், வீட்டருகே உள்ள உள்ள, 60 அடி ஆழ பொது கிணற்றில் ஒரு ஆடு தவறி விழுந்து விட்டது.
தகவலின்படி சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆட்டை பத்திரமாக மீட்டு ஒப்படைத்தனர்.

