ADDED : ஆக 21, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட துணை தலைவர் கண்ணன் தலைமையில்,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
த.வெ.க.,
அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து,
அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். வருவாய்
கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை
ஊதியம் வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வாழ்வாதார
கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய கிராம உதவியாளர் மீது போடப்பட்ட
வழக்கை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
