/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ஈரோடு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 04, 2026 09:07 AM

ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 50-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நிறுவன தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் , மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வெள்ளக்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணகுமார் கலந்து கொண்டார். விழாவில், ஒன்பது முதுநிலை மாணவர், 30 இளங்கலை மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1,075 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், இயக்குநர் வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.

