/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.15.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.15.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : அக் 12, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.15.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
பு.புளியம்பட்டி, அக். 12-
புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 514 மூட்டை கொண்டு வந்தனர்.
நிலக்கடலை காய்ந்தது முதல் தரம் கிலோ, 74 ரூபாய் முதல், 76.70 ரூபாய்; இரண்டாம் ரகம், 67 ரூபாய் முதல், 72 ரூபாய் வரை, 15.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.