ADDED : அக் 16, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் நிர்மலாதேவி துவக்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்லுாரி பாடப்பிரிவு, பாடப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. விரிவுரையாளர்கள் சிவராஜ், கவுதமி செல்வி, நித்யாதேவி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட பி ளஸ் 2 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.