sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏலம் கபாலீஸ்வரர் கோவில் முன் பூக்கடை நடத்துவோர் புகார்

/

மாநகராட்சி இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏலம் கபாலீஸ்வரர் கோவில் முன் பூக்கடை நடத்துவோர் புகார்

மாநகராட்சி இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏலம் கபாலீஸ்வரர் கோவில் முன் பூக்கடை நடத்துவோர் புகார்

மாநகராட்சி இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏலம் கபாலீஸ்வரர் கோவில் முன் பூக்கடை நடத்துவோர் புகார்


ADDED : ஜூலை 01, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மாநகராட்சி இடத்துக்கு விதிமுறை மீறி, இந்து சமய அறநிலையத்துறை ஏலம் விட்டுள்ளதாக, ஆருத்ர கபாலீஸ்வர் கோவிலில் பூக்கடை வைத்துள்ள கடைக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு எதிரே சாலையில், 12 தற்காலிக பூக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளை நடத்த அரசின் சார்பில் வியாபாரிகளுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகளை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர், ஒவ்வொரு கடைக்காரரும் தலா, இரண்டு லட்சம் ரூபாய் கேட்பதாக, கடைக்காரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி, 36வது வார்டில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பூக்கடைகளுக்கான ஏலம் கடந்த, 12ம் தேதி நடந்தது. இதில், 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக தெரிகிறது. இதன்படி ஜூலை, ௧ம் தேதி கடைகளை ஒப்படைக்க வேண்டும். பா.ஜ., பிரமுகர் ஏலம் எடுத்துள்ளார். ஒவ்வொரு கடைக்காரரும் தலா இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்கிறார். அந்த அளவுக்கு கடைகளரில் வியாபாரம் ஆவதில்லை. வாழ்வாதாரத்துக்காகத்தான் கடை நடத்துகிறோம்.

பூக்கடை அமைந்துள்ள சாலை மாநகராட்சிக்கு உட்பட்டதாகும். ஆனால், அறநிலையத்துறை சார்பில் முறைகேடாக ஏலம் விடப்பட்டுள்ளது.

இதையறிந்த ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்ந சீனி அஜ்மல்கான், ௨௦௨௧ல் ஏலம் நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டார். இதனால் அந்த ஆண்டு ஏலம் நடத்தப்படவில்லை. மீண்டும், ௨௦௨௨ல் ஏலம் நடத்தியதில், ௪.௮௦ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. அதன் பிறகு இரு ஆண்டாக ஏலம் நடத்தாமல் இருந்தனர். ஏலம் விடப்படாத காலங்களில், ஒவ்வொரு பூக்கடையிலும் அதன் அளவை பொறுத்து, தினமும், ௧௫௦ ரூபாய் முதல் ௪௦௦ ரூபாய் வரை இந்து சமய அறநிலையத்துறையினர் வசூலித்தனர்.

தற்போது கடைகளுக்கு முறைகேடாக ஏலம் விட்டதுடன், அனைத்து கடைகளுக்கும் ஒரே அளவில், 2 லட்சம் ரூபாய் தருமாறு ஏலம் எடுத்தவர் கேட்கிறார். மாநகராட்சி இடத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஏலம் நடத்தியது முறைகேடாகும். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us