ADDED : நவ 25, 2025 01:25 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி, : பவானிசாகர் யூனியன் நல்லுார் பஞ்சாயத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்கின்றனர்.
இவர்களுக்கு சரிவர வேலை வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதை கண்டித்து பஞ்,. அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.
