sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது உடற்கூறு பரிசோதனை அறிக்கையால் அம்பலம்

/

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது உடற்கூறு பரிசோதனை அறிக்கையால் அம்பலம்

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது உடற்கூறு பரிசோதனை அறிக்கையால் அம்பலம்

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது உடற்கூறு பரிசோதனை அறிக்கையால் அம்பலம்


ADDED : ஏப் 30, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்::

காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய கணவன், உடற்கூறு அறிக்கையால் சிக்கினார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கொழுமங்குழி, ஓரம்புதுார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மூன்றாவது மகள் கவிதா, 36; காங்கேயத்தில் ஒரு எலக்ட்ரிக் கடையில் பணிபுரிந்தார். முத்துார் அருகேயுள்ள தண்ணீர்பந்தலை சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்தன், 43; கட்டட தொழிலாளி. இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

தம்பதிக்கு எட்டு வயதில் மகன் உள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சில ஆண்டுகளாக குடும்பத்துடன், காங்கேயம் அருகே நத்தக்காடையூர், வெள்ளியம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்தார். கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த, 26ம் தேதி இரவு தகராறு ஏற்பட்ட நிலையில், ௨௭ம் தேதி அதிகாலை, உறங்கி கொண்டிருந்த கவிதாவின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். காலையில் மகன் எழுந்து, அம்மாவை கேட்டு அழுதபோது, மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நாடகமாடினார்.

இதையறிந்து வந்த கவிதாவின் உறவினர்கள், காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

கவிதாவின் கழுத்தில் காயங்கள் இருந்ததால், காங்கே

யம் போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பினர். இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து, சடலத்தை பெற்ற ஆனந்தன், இறுதிச்சடங்கு செய்து உறவினர்களிடம் நாடகமாடி வந்தார்.உடற்கூறு பரிசோதனையில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால், காங்கேயம் போலீசார் ஆனந்தனை பிடித்து விசாரித்தனர். இதில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொள்ளவே, அவரை நேற்று கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us