/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
/
காங்கேயத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED : ஆக 28, 2025 01:43 AM
காங்கேயம், ஆக. 28
காங்கேயத்தில், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் சார்பில், 15 சிலைகளுடன் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் வி. ெஹச்.பி., சார்பில், 15க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு காங்கேயம் களிமேட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சங்கரகோபால் சிறப்புரையாற்றினார். 5:00 மணியளவில் விசர்ஜன ஊர்வலத்தை மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார்
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று, பழைய
கோட்டை ரோடு ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு பெற்றது. பா.ஜ., நிர்வாகிகள் நரேந்திரன், தமிழர் சிந்தனை பேரவை செந்தில்குமார், பெண்கள் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகளை, வாகனத்தில் எடுத்து சென்று திட்டுப்பாறை கீழ்பவானி கால்வாயில் கரைக்கப்பட்டது. காங்கேயம் ஏ.எஸ்.பி., அர்பிதா ராஜ்புட் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

