sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொடர் மழையால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

/

தொடர் மழையால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

தொடர் மழையால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

தொடர் மழையால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு


ADDED : நவ 15, 2024 07:12 AM

Google News

ADDED : நவ 15, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 23,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 22,000 ரூபாய் முதல், 90,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகளும் கொண்டு வரப்பட்டன.

இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள், மாடு வளர்ப்போர் மாடுகளை விற்பனைக்கு அழைத்து வரவில்லை. விவசாய பணிகள் நடப்பதாலும், மாட்டை விற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், 600க்கும் குறைவான மாடுகளே வந்தன. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதியினர், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். 80 சதவீத மாடுகள் விற்றன. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us