sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜி.எச்.,களில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

/

ஜி.எச்.,களில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜி.எச்.,களில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜி.எச்.,களில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு


ADDED : ஜன 16, 2025 07:25 AM

Google News

ADDED : ஜன 16, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் மற்றும் டயாலிசிஸ் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொதுவாக சி.டி.ஸ்கேன் மற்றும் டயாலிசிஸ் போன்றவை, தனியார் மையங்களில் எடுக்கும்போது செலவு அதிகரிக்கிறது. ஏழைகள் பயன் பெறும் வகையில் தேசிய நலக்குழுமம், மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் அமைப்புகளின் உதவியுடன் அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் மற்றும் டயாலிசிஸ் மையங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறாக ஈரோடு, கோபி, சத்தி அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் செய்யப்படுகிறது.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு அரசு மருத்துவமனையில், 2023 ஏப்., முதல், 2024 மார்ச் வரை சி.டி.ஸ்கேன், 15,070 நோயாளிகளும், ஏப்., 2024 முதல் நவ., 2024 வரை, 10,357 பேரும் பயன் பெற்றுள்ளனர். கோபி அரசு மருத்துவமனையில் ஏப்., 2023 முதல் மார்ச், 2024 வரை, 45,374 பேர்; ஏப்., 2024 முதல் நவ., 2024 வரை, 3,653 பேர் பயனடைந்துள்ளனர். சத்தி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி கடந்த, மார்ச், 13ல் நிறுவப்பட்டது. ஏப்., 2024 முதல், நவ., 2024 வரை, 6,535 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில், 2023 ஏப்., முதல், 2024 மார்ச் வரை, 20,471 பேரும், 2024 ஏப்., முதல் நவ., வரை, 20,545 நோயாளிகளும் பயன் பெற்றுள்ளனர். இங்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் பெறப்படுகிறது.

அதேபோல இம்மூன்று மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் இயந்திரங்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.ஈரோடு அரசு மருத்துவமனையில், 2023 ஏப்., முதல் 2024 மார்ச் வரை 332 நோயாளிகள், 2,148 முறையும், 2024 ஏப்., முதல் நவ., வரை 321 நோயாளிகள், 2,201 முறை டயாலிசிஸ் செய்து பயன் பெற்றுள்ளனர்.

ஒளிரும் ஈரோடு தன்னார்வ நிறுவனம் மூலம் கடந்த ஏப்., 2023 முதல், 2024 மார்ச் வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மருத்துவம், 1,112 நோயாளிகளுக்கு, 11,465 முறை; ஏப்., 2024 முதல் நவ., வரை, 796 நோயாளிகளுக்கு, 8,282 முறை செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோபி மற்றும் சத்தி அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் அவர்கள் பயன் பெற்ற சுழற்சி முறையும் கூடுதலாகி உள்ளது. இந்நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்வதற்கு கூடுதல் கட்டணமாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் குறைந்த, சலுகை மற்றும் இலவச பயன்பாட்டில் டயாலிசிஸ் செய்து பயன் பெறுகின்றனர். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us