/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் உற்பத்தி திறன் விருது பெற அழைப்பு
/
நெல் உற்பத்தி திறன் விருது பெற அழைப்பு
ADDED : செப் 19, 2025 01:08 AM
ஈரோடு,வேளாண் துறை மூலம், 2025-26ம் ஆண்டுக்கு, திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்தில் அதிக உற்பத்தி பெறும் விவசாயிக்கு, சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது அளிக்கப்படுகிறது.
வெற்றி பெறும் விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு, பதக்கம் வழங்கப்படும். பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயி, சொந்தமாக அல்லது குத்தகையாக, 2 ஏக்கர் பரப்பில், தொடர்ந்து மூன்றாண்டு திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரகங்களை (சன்ன ரகம்) மட்டும் பயிர் செய்திருக்க வேண்டும்.
தகுதியான விவசாயிகள், தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி, விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், 150 ரூபாய் செலுத்த வேண்டும். நெல் பயிரிடப்பட்ட பரப்பு சான்று, சிட்டா, அடங்கல், நிலவரைபடம் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச், 31 கடைசி நாளாகும். பங்கேற்போர் ஏப்.,15க்குள்
அறுவடை மேற்கொள்ள வேண்டும்.