sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஜாதியை சொல்லி தூத்துக்குடி மக்களை ஏமாற்றுகிறார் கனிமொழி' பவானியில் சீமான் காட்டம்

/

'ஜாதியை சொல்லி தூத்துக்குடி மக்களை ஏமாற்றுகிறார் கனிமொழி' பவானியில் சீமான் காட்டம்

'ஜாதியை சொல்லி தூத்துக்குடி மக்களை ஏமாற்றுகிறார் கனிமொழி' பவானியில் சீமான் காட்டம்

'ஜாதியை சொல்லி தூத்துக்குடி மக்களை ஏமாற்றுகிறார் கனிமொழி' பவானியில் சீமான் காட்டம்


ADDED : ஜன 31, 2025 02:35 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ''நான் உங்கள் ஜாதி ஆளு எனக்கூறி, பாவப்பட்ட துாத்துக்குடி மக்களை, கனிமொழி நம்ப வைத்து ஏமாற்றுகிறார்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பெருமாள் மலையில், நா.த.கட்சி., ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:

ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்தி பேசியது, முன்னாள் முதல்வர் கரு-ணாநிதிதான். அவரை இழிவுபடுத்திய பெரிய கூலி கருணாநி-திதான். மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசியது கனிமொ-ழிதானே. அப்படி இருக்கும்போது, உங்களை எப்படி கடவுள் மறுப்பாளர் என ஏற்க முடியும்? சமூக நீதியின் காவலராக தன்னை காட்டிக் கொள்ளும் கனிமொழி, தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூரில் போட்டியிடாமல் தூத்துக்குடிக்குச் சென்று போட்டியிட்டது ஏன்?

ஜாதியை சொல்லி ஏமாற்றும் கனிமொழி, அதே ஜாதியை சொல்லி ஏமாற்றி துாத்துக்குடியில் வெற்றி பெற்றார். இன்னும், துாத்துக்குடி மக்கள், தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் கனிமொழி என நம்பி ஏமாந்து கொண்டுள்ளனர். கருணாநிதியின் மகள் எப்படி நாடார் ஆக முடியும்? கனிமொழி நாடார் என்றால், முதல்வர் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு ஆகியோரும் நாடார்-தானே. ஒரு அப்பாவுக்கு இரண்டு ஜாதிகள் இருக்குமா?

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், பூஜை அறை யில் சமஸ்-கிருத ஸ்லோகம் சொல்வதை காட்டட்டுமா? அத்திவரதர் கோவிலில் குடும்பமாக நின்று கும்பிட்டது யார்?முருகனை நான் தொட்டேன் சரி. நீங்கள் ஏன் முருகனுக்கு மாநாடு போட்டீர்கள்? இது தான் கடவுள் மறுப்பா? ஈ.வெ.ரா., கொள்கை பேசுவோர் சாதிக்காததை முன்னாள் முதல்வர் ஜெ., சாதித்து காட்டினார். பொது தொகுதியில் தலித்தை நிறுத்தி வெற்றி பெற செய்தார். தி.மு.க. கட்சி ஆ.ராஜாவை, தமிழனாக பார்க்காமல், தாழ்த்தப்-பட்டவனாக பார்த்து, நீலகிரி தொகுதியில் நிறுத்தியது.

எம்.ஜி.ஆர்., தன் சொத்துக்களை காது கேளாதவர்களுக்கு எழுதி வைத்து சென்றார். ஈ.வெ.ரா., எதை யாருக்கு எழுதி வைத்-தார்? சொந்த செல்வாக்கு, கட்சி செல்வாக்கு இருக்கிறது என்றால், தூத்துக்குடியிலும் பணம் கொடுக்காமல் கனிமொழி வென்று காட்ட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us