/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஆக 29, 2024 07:36 AM
ஈரோடு: ஈரோட்டில், வக்கீல்கள் நீதிமன்ற புறக் கணிப்பில் நேற்று ஈடுபட்டனர்.
சட்ட துறையில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள, மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, வக்கீல்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. புதிய சட்டங்களை திரும்ப பெற கோரி, ஏற்கனவே ஈரோடு மாவட்ட வக்கீல்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். பார் அசோசியேஷன் மட்டுமின்றி அட்வகேட்ஸ் அசோசியேஷன் வக்கீல்களும் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 200 பெண் வக்கீல்கள் உள்ளிட்ட 900 வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.