/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருத்துவமனை அருகில் நீதிமன்றம் வக்கீல்கள் காத்திருப்பு போராட்டம்
/
மருத்துவமனை அருகில் நீதிமன்றம் வக்கீல்கள் காத்திருப்பு போராட்டம்
மருத்துவமனை அருகில் நீதிமன்றம் வக்கீல்கள் காத்திருப்பு போராட்டம்
மருத்துவமனை அருகில் நீதிமன்றம் வக்கீல்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 28, 2024 01:23 AM
மருத்துவமனை அருகில் நீதிமன்றம்
வக்கீல்கள் காத்திருப்பு போராட்டம்
சத்தியமங்கலம், நவ. 28-
சத்தியமங்கலத்தில், வக்கீல்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சத்தியமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், 2008 முதல் வாடகை கட்டடத்தில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் கட்டுவதற்கு, உதயமரத்து மேடு பகுதியில், 2018ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகில், ஐந்து ஏக்கர் நிலமும், 45 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.அந்த பகுதியில் நீதிமன்றம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சத்தியமங்கலம் வக்கீல்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில், 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி சாலையில் உள்ள இடத்தில் கட்ட வேண்டும் என
அவர்கள் கூறினர்.