sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : செப் 06, 2024 07:37 AM

Google News

ADDED : செப் 06, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 695 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 62.69 ரூபாய் முதல், 71.69 ரூபாய் வரை, 21,771 கிலோ நிலக்கடலை, 14.௦௩ லட்சத்துக் விற்பனையானது.

* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு பச்சை நிலக்கடலை, 148 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 31.29 - 42 ரூபாய் என, 2.74 லட்சத்திற்கு விற்றது. காய்ந்த நிலக்கடலை, 25 மூட்டை வரத்தாகி, 66.06 - 72.52 ரூபாய்க்கு விலை போனது.* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த, தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 8,098 கிலோ வரத்தானது. சராசரியாக ஒரு கிலோ, 103 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான தேங்காய் பருப்பு, 8.12 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 55 ரூபாய், நேந்திரன், 26 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 800, தேன்வாழை, 810, செவ்வாழை, 1,000, ரஸ்த்தாளி, 620, பச்சைநாடான், 410, மொந்தன், 300, ரொபஸ்டா, 390 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 9,565 வாழைத்தார்களும், 21 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

* புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ, 260 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. ஒரு கிலோ, 400 ரூபாய்க்கு விற்ற மல்லி, 940 ரூபாய், முல்லை, 700 ரூபாய், ஜாதிமல்லி, 750, கோழிக்கொண்டை, 170, கனகாம்பரம், 1,210 ரூபாய்க்கும் விற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவே, பூக்கள் விலை உயர்வுக்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

*ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 23,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் உயர்ரக கலப்பின மாடுகள், 50க்கும் மேல் வரத்தானது. தமிழகம் மற்றும் கேரளா விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் கால்நடைகளை மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us