/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டு சர்க்கரை, வெல்லம் ரூ.53 லட்சத்துக்கு ஏலம்
/
நாட்டு சர்க்கரை, வெல்லம் ரூ.53 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஜன 01, 2025 01:20 AM
கோபி, ஜன. 1-
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக, 2,720 ரூபாய் முதல், 2,730 ரூபாய்; இரண்டாம் தரம் (மீடியம்), 2,480 ரூபாய் முதல், 2,560 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 2,105 மூட்டைகளும், 53.05 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
உருண்டை வெல்லம், 50 மூட்டை (30 கிலோ)  வரத்தாகி, ஒரு மூட்டை, 1,650 ரூபாய் விலையில், 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 53.88 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

