/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : மார் 09, 2024 01:19 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகரை அடுத்த விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி, அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மஹாலட்சுமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு விழாவையொட்டி நேற்று மாலை கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்து விழா தொடங்கியது.
கிராமத்தில் உள்ள குரும்பர் இன மக்கள், பாரம்பரியமாக குலதெய்வங்களிடம் அருள் கிடைக்க வேண்டி வழிபட்டனர். அருள் கிடைத்த பக்தர்கள் தாங்களாகவே சுவாமி முன் குவித்து வைக்கப்பட்ட தேங்காய்களை எடுத்து தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பவானி ஆற்றுக்கு அம்மன் அழைக்க
சென்றனர்.
அங்கிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மீண்டும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு முழுவதும் கண்விழித்து மஹாசிவராத்திரி விழாவை கொண்டாடினர்.
விடிய விடிய நடந்த விழாவில் கோவை மாவட்டம் தீத்திபாளையம், அஜ்ஜனுார், கல்வீரம்பாளையம்,
சின்னத்தடாகம், கெம்பையனுார், வண்டிக்காரனுார், சுண்டப்பாளையம், கஸ்துாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த குரும்பர் இன மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.