sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெரிஞ்சிப்பேட்டையில் மின் கதவணை பராமரிப்பு; காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நிறுத்தம்

/

நெரிஞ்சிப்பேட்டையில் மின் கதவணை பராமரிப்பு; காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நிறுத்தம்

நெரிஞ்சிப்பேட்டையில் மின் கதவணை பராமரிப்பு; காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நிறுத்தம்

நெரிஞ்சிப்பேட்டையில் மின் கதவணை பராமரிப்பு; காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நிறுத்தம்


ADDED : ஏப் 28, 2025 07:23 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை மின் கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்படி நெரிஞ்சிப்பேட்டை பகுதியில், 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கதவணை பராமரிப்பு பணி, 15 நாட்கள் மேற்கொள்ளப்படும். இதனால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு, பணி தொடங்கும். நேற்று முன்தினம் இரவு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்து. இதனால் நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டி இடையே காவிரி ஆற்றில் நடக்கும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கோனேரிபட்டி சென்று, காவிரி ஆற்றுபாலத்தை கடந்து, 10 கி.மீ., துாரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us