/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் மிதந்த ஆண் உடல் மீட்பு
/
வாய்க்காலில் மிதந்த ஆண் உடல் மீட்பு
ADDED : நவ 23, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே காவேரிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, சிறுவலுார் போலீ-சாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருந்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் இடது மார்பு பகுதியில் 'ஓம் சக்தி' என பச்சை குத்தப்பட்டிருந்தது. வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து, சிறு-வலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.