நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
8ல் மனு நீதி முகாம்
ஈரோடு, ஜன. 4-
நம்பியூர் தாலுகா கெட்டிச்செவியூரில், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, ராஜம்மாள் திருமண மண்டபத்தில், வரும், 8ம் தேதி காலை, 11:00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள், தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு காணலாம்.

