/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தான்தோன்றியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை கோலாகலம்
/
தான்தோன்றியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை கோலாகலம்
ADDED : டிச 25, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே, மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றி-யம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 10ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 22ல் சந்தனக்-காப்பு அலங்காரம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 8:30 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
அதையடுத்து இன்று (டிச.,25) அதிகாலை 3:00 மணிக்கு அம்மை அழைத்தல், பக்தர்கள் பூ மிதிக்கும் குண்டம் திருவிழா காலை 7:40 மணிக்கு நடக்கிறது. இதனால் அம்மன் சன்னதி எதி-ரேயுள்ள குண்டத்தில், 10 டன் எரிக்கரும்பு எனும் ஊஞ்சமரக்-கட்டை குவிக்கப்பட்டுள்ளது.

