sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி

/

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: -ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாநகராட்சி, 42 மற்றும் 43வது வார்டு பகுதிகளில் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலையில் சென்று, வீடு-வீடாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மாலையில், 52, 53வது வார்டு பகுதிகளில் பிரசாரம் நடந்தது.

'மகளிர் உரிமை தொகையாக பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய், தமிழ் புதல்வன் திட்டத்தில், கல்லுாரி மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய், கல்லுாரி மாணவியருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் உயர்கிறது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு தேர்தலுக்கு பின், முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வழங்குவார்' என அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சருடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தி.மு.க., நெசவாளரணி மாநில செயலாளர் சச்சிதானந்தம், நிர்வாகிகள் செந்தில்குமார், காங்., மாவட்ட தலைவர் திருச்செல்வம் உட்பட பலர் சென்றனர்.






      Dinamalar
      Follow us