sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம் நிதி நிலையை சொன்ன அமைச்சர்

/

நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம் நிதி நிலையை சொன்ன அமைச்சர்

நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம் நிதி நிலையை சொன்ன அமைச்சர்

நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம் நிதி நிலையை சொன்ன அமைச்சர்


ADDED : மார் 24, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வெறிநாய்களால் பலியான கால்நடைகளுக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்பட்டது. இதில் ஆட்டுக்கு, 6,௦௦௦ ரூபாய்; கோழிக்கு, 200 ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு பெரியார்நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சந்தை மதிப்பில் ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர். அரசின் நிலை நிலையால் சந்தை மதிப்பு வழங்க இயலவில்லை. இந்தாண்டு எத்தனை ஆடுகள் வெறி நாய் கடியால் இறந்தது என்ற பட்டியல் கலெக்டரிடம் உள்ளது.

வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது. தெரு நாய்கள் ஒழிப்பு விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை உள்ளது. விவசாய சங்கங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us