/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டுமனை பட்டா கோரி 500க்கும் மேற்பட்டோர் மனு
/
வீட்டுமனை பட்டா கோரி 500க்கும் மேற்பட்டோர் மனு
ADDED : ஆக 19, 2025 03:00 AM
ஈரோடு, பெருந்துறை, அண்ணா நகர், திங்களூர் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில், 350க்கும் மேற்பட்டோர் நேற்று மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு சொந்தமான நிலம், வீடு இல்லை.
தினசரி கூலி வேலை, கிடைக்கும் வேலைகளையும் செய்து வாழ்கிறோம். எங்கள் வசிப்பிடம் அருகே இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவசமாக வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இதேபோல் நம்பியூர் தாலுகா ஜீவா ெஷட் பகுதியினர், பல்வேறு பகுதியை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கினர்.