sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டு எண்ணிக்கை; கலெக்டர் உத்தரவு

/

ஓட்டு எண்ணிக்கை; கலெக்டர் உத்தரவு

ஓட்டு எண்ணிக்கை; கலெக்டர் உத்தரவு

ஓட்டு எண்ணிக்கை; கலெக்டர் உத்தரவு


ADDED : மே 31, 2024 03:16 AM

Google News

ADDED : மே 31, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் ஜூன், 4 ல் எண்ண உள்ள நிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:வரும் ஜூன், 4ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 14 மேஜைகள் வீதம், 6 சட்டசபை தொகுதிக்கு, 84 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பாதுகாப்பு இருப்பறையில் இருந்து ஓட்டு எண்ணும் அறைக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு வர, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 1 முதல், 14 வரை உள்ள அனைத்து மேஜைகளிலும், வரிசை எண் குறிப்பிட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கையில், ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிப்பு பலகையில் முறையாக எழுத வேண்டும். ஓட்டு எண்ணும் அறைக்குள் தேவையான குடிநீர், இருக்கைகள், தற்காலிக கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுக்கென தனி வழியும், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு அலுவலர்களுக்கென தனி வழியை ஏற்பாடு செய்ய வேண்டும். ஓட்டு எண்ணும் பணியை, தேர்தல் ஆணைய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, உதவி தேர்தல் அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us