/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் கருவேல மரம் ஏலம் ஒத்திவைப்பு
/
தாராபுரத்தில் கருவேல மரம் ஏலம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 19, 2026 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம், பொதுப்பணித்துறை செயற்
பொறியாளர் அலுவலக வளாகத்தில், வட்டமலை கரை ஓடை பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான ஏலம், நேற்று நடைபெற இருந்தது.
இதில் பங்கேற்க, விவசா-யிகள் உள்பட திரளானோர் வந்திருந்தனர். இந்நிலையில், வட்ட-மலை கரை ஓடை பகுதியில் உள்ள, 650 ஏக்கரில், 50 ஏக்கர் பகு-தியில் உள்ள சீமை கருவேல மரங்கள் மட்டுமே ஏலம் விடாமல், மொத்தமாக ஒரே ஏலமாக விட வேண்டும் எனக் கோரியும், அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக உள்ளதாகவும் கூறி, யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகள், தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைத்தனர்.

