sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அந்தியூர் அருகே போராட்டம்

/

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அந்தியூர் அருகே போராட்டம்

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அந்தியூர் அருகே போராட்டம்

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அந்தியூர் அருகே போராட்டம்


ADDED : மார் 20, 2024 01:36 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:அந்தியூர் அருகே அண்ணமார்பாளையத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை, அப்பகுதி மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சுடுகாட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதற்காக, பழமையான மரங்களை வெட்டி, சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணமார்பாளையத்தை சேர்ந்த, 20௦க்கும் மேற்பட்ட மக்கள், சுடுகாட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

'மயானத்தை, 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது தனி நபர் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று மக்கள் வலியுறுத்தினர். 'தேர்தல் முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' என்று அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us