ADDED : மார் 16, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:பவானி
கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும்,
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அமாவாசை மற்றும்
முகூர்த்த நாட்களில் பல மடங்கு அதிகரிக்கும். தற்போது கோடை காலம்
தொடங்கியுள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர் வழங்க
முடிவு செய்து, உபயதாரர்கள் மூலம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
கோடை முடியும்வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என கோவில்
நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு உதவ
உபயதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

