/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் மோதி முதியவர் பலி; சிறுவன் மீது வழக்கு பதிவு
/
பைக் மோதி முதியவர் பலி; சிறுவன் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 04, 2024 11:10 PM
ஈரோடு ; ஈரோடு, சூரம்பட்டி, சங்கு நகரை சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன், 77; மொபட்டில் சங்கு நகர் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு சென்றார். பெருந்துறை சாலையில் திரும்ப முயன்ற போது, அவ்வழியாக வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மோதியதில், ஜெய்னுலாப்தீன் தலையில் பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனிடையை, சூரம்பட்டி போலீசார் விசாரணையில், பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, ஈரோட்டை சேர்ந்த ஜெயராமன் என்பவரின், 16 வயது மகனான பிளஸ் 1 படிக்கும் மாணவன் என, தெரிந்தது. சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.