sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள், இந்து முன்னணியினர் எதிர்ப்பு

/

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள், இந்து முன்னணியினர் எதிர்ப்பு

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள், இந்து முன்னணியினர் எதிர்ப்பு

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள், இந்து முன்னணியினர் எதிர்ப்பு


ADDED : அக் 10, 2024 02:35 AM

Google News

ADDED : அக் 10, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்:நம்பியூரில், விநாயகர் சிலையை அகற்ற கூறியதால், இந்து முன்னணி பிரமுகர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே, பொலவபாளையம் முல்லை நகர் அழகாபுரி குடியிருப்பு பகுதியில், 39 பேருக்கு சொந்தமான பட்டா நிலங்கள் உள்ளன. அப்பகுதியில் சச்சிதானந்தம் என்பவருக்கு சொந்தமான, 1.20 சென்ட் பட்டா இடத்தில், 2.5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து சிலை வைத்துள்ளனர். அதற்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவர், பொலவபாளையம் பஞ்.,ல், உரிய அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளதாக புகார் தெரிவித்து, சிலையை அகற்ற வேண்டும் என, நம்பியூர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில், சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை அகற்ற பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்படவே, நேற்று, 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நம்பியூர் தாசில்தார் ஜாகீர் உசேன், இரு தரப்பினர் இடையே நேற்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்து முன்னணியை சேர்ந்த சம்பத்குமார், 35, என்பவர் வழிபாடு நடத்த அனுமதிக்க வலியுறுத்தி, திடீரென மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீப்பற்ற வைக்க முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சிலைக்கு போடப்பட்டு இருந்த இரும்பு கதவு அகற்றப்பட்டு, விநாயகர் சிலை முன் வழிபாடு நடைபெற்றது. 10 நாட்களுக்குள் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்பே, வழிபாடு நடத்த வேண்டும் என தாசில்தார் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us