/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு நிலத்தில் குடிசை அமைக்க திரண்ட மக்கள் இலவச பட்டா கிடைக்காததால் ஆவேசம்
/
அரசு நிலத்தில் குடிசை அமைக்க திரண்ட மக்கள் இலவச பட்டா கிடைக்காததால் ஆவேசம்
அரசு நிலத்தில் குடிசை அமைக்க திரண்ட மக்கள் இலவச பட்டா கிடைக்காததால் ஆவேசம்
அரசு நிலத்தில் குடிசை அமைக்க திரண்ட மக்கள் இலவச பட்டா கிடைக்காததால் ஆவேசம்
ADDED : மார் 31, 2025 02:40 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், அரசு புறம்-போக்கு நிலத்தில், குடிசை அமைக்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புன்செய் புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் பஞ்.,கணக்கர-சம்பாளையம், மாராயி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்க-ணக்கான மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சத்தி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
பல ஆண்டுகளாகியும் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்-பட்டோர் கணக்கரசம்பாளையம் மொக்கை அருகே அரசு புறம்-போக்கு நிலத்தில் குடிசை அமைக்க நேற்று திரண்டனர். கற்களை வைத்து இடம் பிடிக்க துவங்கினர். தகவலறிந்து சென்ற புன்செய் புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதானம் அடையாமல் தொடர்ந்து இடத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்-டதால் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வந்த வருவாய்த்து-றையினர் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். 'சத்தி தாசில்தார் அலுவலகத்தில் ஏப்.,2ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என வருவாய்த்துறை-யினர் உறுதியளிக்கவே மக்கள் கலைந்து சென்றனர்.