ADDED : ஆக 18, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலையை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலு-வலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:
மணல்மேடு வீதியில் எல்லை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கோவிலை வழிபாடு செய்கின்றனர். சில நபர்கள் துாண்டு-தலின் பேரில், கோவிலை அகற்ற முயற்சி மேற்-கொள்கின்றனர். அவ்விடத்தை வி.ஏ.ஓ., - தாசில்தார் போன்றோரும் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர். கோவிலை இடிக்காமல், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
