/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
/
மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
ADDED : ஏப் 13, 2025 04:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் ரகு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா-விடம், வழங்கிய மனுவில் கூறியதாவது:
மாவட்ட மலைப்பகுதிகளான தாளவாடி, கடம்பூர் மற்றும் அந்-தியூர் மலைப்பகுதிகளில் பல தலைமுறைகளாக பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
மனித-விலங்கு மோதலை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க ஆழமான, அகல-மான அகழிகளை தோண்ட வேண்டும். அகழி தோண்டும் போது மண்ணை வனப்பகுதியில் கொட்டக்கூடாது. விளாங்கோம்பை வன செட்டில்மென்ட் பகுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.வன உரிமை சட்டத்தை அமலாக்க வேண்டும். விளாங்கோம்-பைக்கு பள்ளி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மலைப்பகுதி விளைநிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆசனுார், கேர்-மாளம், திங்களூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் தடையின்றி மின்-சாரமும், திம்பம் மலைப்பகுதிக்கு மும்முனை
மின்சாரமும் வழங்க வேண்டும்.
கடம்பூர் மலைப்பகுதியில் இயக்கப்படும் பஸ்களில், பெண்க-ளுக்கு இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். திம்பம் மலைப்பகுதி பழங்குடி கிராமங்கள், ஆசனுார் பஞ்., கெத்-தேசால், கேர்மாளம் பஞ்., பகுதிகளுக்கு மொபைல்போன் டவர் அமைத்து, இணைப்பு கிடைக்க செய்ய வேண்டும்.
தாளவாடி யூனியன் இட்டரை, தடசலட்டி கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத நிலையில், தற்போது வனத்துறை அனுமதியும் கிடைத்த விட்டதால் சாலை அமைக்க நிதி இல்லை என கூறு-கின்றனர். நிதி ஒதுக்கி விரைவாக சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.