ADDED : ஏப் 26, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்க அதிகாரி வாசுதேவன், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,), நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், வரும், ௨௮ம் தேதி காலை, சென்னிமலையில் உள்ள எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜினியரிங் கல்லுாரியில் நடக்கிறது.
காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

