ADDED : நவ 25, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, : தாளவாடி, போஸ்கோபுரம், தொட்டகாஜனுாரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்கிறது.
வருங்கால வைப்பு நிதி அலுவலக அமலாக்க அதிகாரி சரவணகுமார் தலைமை வகிக்கிறார். காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலபதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

