sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு மறியல்

/

புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு மறியல்

புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு மறியல்

புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு மறியல்


ADDED : செப் 23, 2024 04:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் பஞ்.,அண்ணாநகர், வெங்கநாயக்கன் பாளையம் காலனி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குழாய் உடைப்பால், 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், வெங்கநாயக்கன் பாளையம் காலனி அருகே, 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி, பொதுமக்களிடம் மொபைல் போனில் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய் உடைப்பை சரி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. என்று மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உடைப்பு சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறவே மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us