/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு பதிவு
/
இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு பதிவு
ADDED : ஜன 28, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கோட்டை மாநகரைச் சேர்ந்த அன்புராஜ் மகள் வைஷ்ணவி, 19, பிளஸ் 1 படித்துள்ளார்; சமையல் தொழில் செய்கிறார். ஈரோடைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு ஆசை வார்த்தை கூறி, கடந்த செப்., மாதம் திருமணம் செய்தார்.
தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், வைஷ்ணவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.