ADDED : ஜூலை 17, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கவுந்தப்பாடி
அய்யன் வலசு பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரசாத், 25; தனியார் பள்ளி
உடற்பயிற்சி ஆசிரியர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
இவர், 2020ல் ஒரு சிறுமியுடன் பழகி, திருமணம் செய்து கொள்வதாக
பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் வேறொருவரை திருமணம் செய்து
கொண்டதால், இதையறிந்து தற்போது, 23 வயதாகும் அந்த இளம்பெண், கோபி
அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார்,
ஹரி பிரசாத் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
