sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை

/

அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை

அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை

அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை


ADDED : மார் 18, 2024 03:39 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், 3 ஷிப்ட்களாக பணி செய்யும் வகையில், 25 பறக்கும் படை, 24 நிலை கண்காணிப்பு குழு, 8 வீடியோ கண்காணிப்பு குழு, 8 கணக்கு தணிக்கை குழு உட்பட, 144 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் பணம், அதிக எண்ணிக்கையில் பொருட்களை எடுத்து வந்தால் பறிமுதல் செய்கின்றனர்.

குறிப்பாக தமிழக - கர்நாடகா எல்லையான பர்கூர், பண்ணாரி, கேர்மாள், காரப்பள்ளம், ஆசனுார் செக்போஸ்ட், கோபி - சத்தி சாலை கோவை பிரிவு செக்போஸ்ட், கருங்கல்பாளையம் செக்போஸ்ட், நொய்யல் செக்போஸ்ட் என மாவட்ட அளவில், 10 செக்போஸ்ட்களிலும், 24 மணி நேர கண்காணிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாதனை சாவடி அருகே கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் கூட்டாக வாகன தணிக்கை செய்தனர்.






      Dinamalar
      Follow us