sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடும்பத்தில் நால்வர் தற்கொலை 4 பேரை கைது செய்த போலீசார்

/

குடும்பத்தில் நால்வர் தற்கொலை 4 பேரை கைது செய்த போலீசார்

குடும்பத்தில் நால்வர் தற்கொலை 4 பேரை கைது செய்த போலீசார்

குடும்பத்தில் நால்வர் தற்கொலை 4 பேரை கைது செய்த போலீசார்


ADDED : ஜன 23, 2025 02:04 AM

Google News

ADDED : ஜன 23, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:கோபி அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக, நால்வரை சிறுவலுார் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர், 35. இவரது மனைவி பாலாமணி, 29. இருவரும் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்தனர். இவர்களுக்கு வந்தனா, 10, என்ற மகள், மோனீஷ், 7, என்ற மகன் இருந்தனர். கடந்த, 15ம் தேதி தன் தாய், தந்தை ஆகியோர் விஷம் சாப்பிட்டு விட்டதாகவும், தனக்கும், தம்பிக்கும், கூல்டிரிங்சில் மாத்திரையை, அவர்கள் கலந்து கொடுத்து விட்டதாக, தன் பாட்டி பெரியகண்ணாள், 60, என்பவருக்கு பேத்தி வந்தனா போனில் தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த பெரியகண்ணாள், பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, மகனும், மருமகளும் இறந்தது தெரியவந்தது.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த, இரு குழந்தைகளும் மறுநாள் இறந்தனர். இது குறித்து, சிறுவலுார் போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் சிக்கியது.

அதில், 'தங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் வாயிலாக, நால்வர் கடன் பெற்று தந்தும், அதற்கு அதிக தொகையை அவர்கள் கமிஷனாக பெற்று ஏமாற்றியதால், மிகுந்த கடனுக்கு உள்ளானதால், தற்கொலை செய்து கொள்ள அவர்களே காரணம்' என, குறிப்பிட்டிருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில், சிறுவலுார் சேது, 25, நாராயணசாமி, 52, வெண்ணிலா, 38, சுமதி, 40, ஆகியோரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us