ADDED : ஜூலை 18, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சுதந்திர
போராட்ட வீரர் பொல்லானின், 221வது நினைவு தினம், அறச்சலுாரை அடுத்த
ஜெயராமபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில், நேற்று
அனுசரிக்கப்பட்டது. அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் மாநகர
மாவட்ட செயலர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது. தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள்
முத்துசாமி, மதிவேந்தன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.
இதேபோல்
பா.ஜ., - தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல்
கட்சிகள், அமைப்பினர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மரியாதை
செலுத்தினர்.
