/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 27ல் அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம்
/
வரும் 27ல் அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 19, 2025 01:38 AM
ஈரோடு, ஈரோடு அஞ்சல் கோட்டத்தின், பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் வரும், 27 மதியம், 2:00 மணிக்கு, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க
உள்ளது.
அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்படும். புகார்கள், மனுக்கள் இருப்பின் தபால் மூலம் வரும், 24க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அல்லது வரும், 24 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மனுக்களை வழங்கலாம். மனுவில் புகார் குறித்த முழு விபரமும் இருக்க வேண்டும். உறையின் மேற்பகுதியில் 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும். இத்தகவலை, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.