ADDED : நவ 17, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நவ. 17-
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் வரும், 20 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
பெருந்துறை அருகே, கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, மின் கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்துார், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், பல்லகவுண்டன்பாளையம் பகுதி மின் பயனீட்டாளர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.