ADDED : மார் 05, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
ஈ.வி.என்.சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் ஈரோடு நகரம், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி பயனீட்டாளர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

