ADDED : ஆக 16, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வரும், 19 காலை,
11:00 மணிக்கு மின் பயனீட்டாளர்கள் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்க
உள்ளது.
'செயற்பொறியாளர், கோட்ட அலுவலகம், 33/11 கி.வோ., துணை
மின் நிலைய வளாகம், கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியம், மின்
நிலைய வளாகம், பெருந்துறை-638053' என்ற முகவரியில் நடக்க உள்ளது. இதில்
பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை,
கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம்,
நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் மின்சார பிரச்னை,
கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம்.
